தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாணையில் உள்ளவாறு வணிக நிறுவன பெயர்ப் பலகைகள் தமிழில் முதன்மையாக இடம்பெற வேண்டும். உரிமங்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலின்போதே பெயர்ப்பலகை தமிழில் முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

The post தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: