இந்தநிலையில், தம்பியின் மரணத்தை நினைத்து கடந்த ஜூலை மாதம் 26ம்தேதி அழுதுகொண்டிருந்த அவர் திடீரென வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்றிரவு கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்படி, கடம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தம்பி இறந்த சோகத்தில் அக்கா தற்கொலை செய்துகொண்டது கிராமத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
The post தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து அக்கா தற்கொலை: திருவள்ளூர் அருகே பாசப்பிணைப்பு appeared first on Dinakaran.