கடந்த 14 மாதங்களாக இடத்தை விற்பனை செய்யாமல் அவர்கள் இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து இடத்திற்கான ஆவணங்களை திருப்பித் தருமாறு கேட்டபோது, போலி ஆவணங்கள் தயாரித்தும், எனது வாழ்நாள் உறுதிச் சான்றை போலியாக தயார் செய்தும், எனது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் வரவு வைத்ததாக வங்கி ஆவணங்களை போலியாக தயார் செய்தும் முன்னாள் எம்பியும் தற்போதைய பாஜ மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா பெயருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடி பத்திரப்பதிவு விவகாரம், எனக்கு தெரிய வந்ததை தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்பட 3 பேரையும் அணுகி பணத்தை தருமாறு கேட்டேன். மூவரும் பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பத்திரப்பதிவு சார் பதிவாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளேன். மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளேன், என்றார்.
The post பாஜ மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா ரூ.2.50 கோடி நிலம் மோசடி: பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக சென்னை தொழிலதிபர் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.
