ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்து செல்வக்குமார் இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் மற்றும் சிவகங்கை தாலுகா போலீசார் கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த செல்வக்குமார் உறவினர்கள் மற்றும் பாஜவை சேர்ந்தவர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அம்பேத்கர் சிலை முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
The post பாஜ நிர்வாகி வெட்டிக்கொலை: முன்விரோதம் காரணமா? appeared first on Dinakaran.