இதற்கு, பில் கலெக்டர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக கதிர்வேல், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரூ.50ஆயிரம் லஞ்ச பணத்துடன் கதிர்வேல் நேற்று காலை துவாக்குடி நகராட்சி அலுவலகம் வந்தார். அப்போது அங்கிருந்த சவுந்தரபாண்டியனிடம் பணம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்னா வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சவுந்தரபாண்டியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
The post வீட்டு மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது: ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.