பவானி சாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களுக்கு தன்ணீர் திறக்க உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து நாளை முதல் முதல்போக பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிடுள்ளது. நாளை முதல் நவ.8-ம் தேதி வரை 120 நாட்களுக்கு, 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி அந்தியூர், ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

The post பவானி சாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களுக்கு தன்ணீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: