சொப்னா கூறியது: பினராயி விஜயன் பினாமிகளின் பெயரில் வளைகுடா நாடுகளில் பல தொழில்கள் நடத்துகிறார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜா, அஜ்மான் ஆகிய நாடுகளில் தான் அதிக அளவில் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால்தான் அடிக்கடி அவர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான சிவசங்கர் பணியில் இருக்கும்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் தான் இது போன்ற பல போலித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கேரளாவில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமரா திட்டத்திலும் பல கோடி ஊழல் நடந்துள்ளது. விரைவில் பினராயி விஜயன் தொடர்பான பல அதிரடி தகவல்களை நான் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post பினாமிகளின் பெயரில் பினராயி விஜயன் வளைகுடா நாடுகளில் தொழில் நடத்துகிறார்: சொப்னா பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.