பேய்களை விரட்ட வந்த வேதாளம் நான்: ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி

சென்னை: தமிழகத்தில் நடமாடும் பேய்களை விரட்ட வந்த வேதாளம் நான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:

31 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஈடு இணை இல்லாத வீரன் அழகுமுத்துக்கோனின் சரித்திரம் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும். பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளுக்கு அவரின் அருமை பெருமைகளை சொல்லித் தர வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மரியாதை செலுத்தியது சந்தோஷம் என்றாலும் கூட, தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ஆணையிட்டு வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற முதல்வர் வழி செய்வார் என நம்புகிறோம்.

அண்ணாமலை ஒரு வேதாளம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடி இருந்தார். இதற்கு அண்ணாமலை பதில் அளிக்கையில், தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளன. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்டத்தான். தற்போது ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த பேயை ஓட்டிவிட்டு அந்த பேய்க்கு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post பேய்களை விரட்ட வந்த வேதாளம் நான்: ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: