இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாரதியார் எழுதிய வரிகளை வேறு யாரோ எழுதியதுபோல் ஊட்டி ரயில் நிலையத்தில் பதாகை அமைக்கப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது குறித்து ஊட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வாசகங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. தெற்கு ரயில்வே தலைமையில் இருந்து வைக்கச் சொன்னார்கள் வைத்தோம்’’ என்பதோடு முடித்துக்கொண்டனர். பாரதியாரின் புகழ்பெற்ற வரிகள் என்பதைக் கூட அறியாமல் அதனை திரித்து வட மாநிலத்தை சேர்ந்த பண்டிதர், கல்வியாளரின் பெயரை அதன் அடியில் பொறித்திருப்பதால் வேண்டுமென்றே ரயில்வே துறை சர்ச்சையை கிளப்பியுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
The post ஊட்டி மலை ரயில் நிலையத்தில் சர்ச்சை பாரதியார் கவிதையை வடமாநில பண்டிதர் எழுதியதாக பதாகை: இந்தி பற்றியும் உயர்வாக பதிவு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.
