குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ரயில் அதிகபட்ச 160 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரம் என்பது வெகுவாக குறையும் எனவும் கூறப்பட்டது. இதனால் மக்கள் பலர் இந்த ரயிலில் விரும்பி டிக்கெட் புக் செய்து பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் தற்போது 76.25 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2020-21-ம் ஆண்டில் வந்தே பாரத் ரயிலில் சராசரி வேகம் 84.48 கிலோமீட்டராக இருந்தது. தற்போது இந்த 2023-24-ம் நிதியாண்டில் இது 76.25 கிலோமீட்டராக வேகம் குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் அறிமுகம் செய்யும்போது 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று சொல்லப்பட்ட இந்த ரயில் தற்போது அதற்குப் பாதி அளவு வேகத்திலேயே இயக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும் அந்த ரயில் செல்லும் பாதையில் ரயில்கள் வேகமாக செல்வதற்கான வசதிகள் இல்லை எனவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இந்த பணி நடப்பதால் தான் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வந்தே பாரத் ரயில்களை 160 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்றாலும், பெரும்பாலான வழித்தடங்கள் அதற்கு ஏற்ற வகையில் இல்லாததால் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
The post ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 76 கி.மீ: தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல் appeared first on Dinakaran.