தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை..!!

புதுச்சேரி: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சமூக நீதி காத்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுகழகம் சார்பில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கலைஞர் செயலாற்றிய திட்டங்களால் பயன்பெற்ற பல்வேறு தரப்பினரும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதையை செலுத்தினார். நிகழ்வில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் நாஜிம் அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாக தியாகராஜன், சம்பத் மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

 

The post தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.

Related Stories: