கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65 பேர் பேர் பலியான வழக்கில் கைதான 11 பேரை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அப்போது, கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா உட்பட 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி ராம், 11 பேரையும் 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து, 3ம்தேதி (நாளை) மாலை 3 மணியளவில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 11 பேரையும் சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
The post விஷ சாராய வழக்கில் கைது 11 பேரை சிபிசிஐடி 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.