இம்மாநாட்டில், தமிழக இளைஞர்களுக்கு இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குதல் உள்பட பல்வேறு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் முதல்வருக்கு பாராட்டுக்கள். மதுரையில் அதிநவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்து கொடுத்த முதல்வரை பாராட்டுகிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களில் அலுவலர்களுக்கான பணி நியமனங்களில் தமிழக இளைஞர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து வரும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த 2014ல் ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்ற உத்தரவாதத்துடன் ஆட்சியமைத்த பிரதமர் மோடி, இன்றுவரை அந்த உத்தரவாதத்தை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாத பிரதமர் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மேலும், 100% வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், மாறிவரும் அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்த வேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்கள் நியமனம்: விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி மாநாட்டில் 7 தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.