அதன்படி,
*இளங்கலை செய்முறை ,எழுத்துத் தேர்வு, இன்டர்னல் தேர்வு.. ஒவ்வொரு தாளுக்கான தேர்வு கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
*இளங்கலை ப்ரொஜெக்ட் தீசிஸ்-க்கு தேர்வுக் கட்டணம் 300 ரூபாயாக இருந்த நிலையில்,. தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
*முதுகலை செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு, இன்டர்னல் தேர்வு, மினி ப்ரொஜெக்ட், கோடைக்கால ப்ரொஜெக்ட் ஆகிய அனைத்துக்கும் தாள் ஒன்றுக்கு முன்பு தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்தது. அது தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
*முதுகலை ப்ரொஜெக்ட் வேலைக்கு, ஒவ்வொரு கட்டத்துக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
*இளங்கலை மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
*முதுகலை படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் கட்டணமும் 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் மற்றும் சான்றிதழுக்கான கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்த்தி அறிவிப்பு.. ஒரு தாளுக்கான கட்டணம் ரூ.225 ஆக அதிகரிப்பு: மாணவர்கள் ஷாக் appeared first on Dinakaran.