மதுரையில் உள்ள 2 நுழைவு வாயில்களை இடிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவுவாயிலை இடித்து அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயிலையும் இடித்து அகற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. நுழைவு வாயில்களை அகற்ற எந்த ஆய்வும் தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை பி.பி. குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

The post மதுரையில் உள்ள 2 நுழைவு வாயில்களை இடிக்க ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: