ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 3நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.