இதையடுத்து அதிகாரிகள் அந்த பொருளை சோதனை செய்ததில், உருமாற்றம் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா என்பதும், ரூ.60 ஆயிரம் மதிப்பிலான உயர்ரக சிகரெட்டுகளும் இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அலி அப்துல் காதர் (52) என்பதும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அலி அப்துல் காதரை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்து அவரிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா மற்றும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
The post விமானத்தில் ரூ.3 கோடி கஞ்சா கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.
