அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு முன்னேறியது என்று எப்படி சொல்கிறார் எடப்பாடி. 2017ம் ஆண்டு தான் உதய் மின் திட்டத்தில் இணைந்தார்கள். அதனால் தான் மின்கட்டணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ளது. 2017ம் ஆண்டு எடப்பாடி நீட் தேர்வுக்கு ஒப்புதல் கொடுத்தார். அதனால் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். முதல்வரின் காலை உணவு திட்டத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகள் குறிப்பாக கனடா, இலங்கை போன்ற நாடுகள் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துகிறது. அரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்கள் முதல்வரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நகல் எடுத்து அதை செயல்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுகவின் ஆட்சிதான் தமிழகத்தின் இருண்ட காலம்: எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி appeared first on Dinakaran.