மேலும் சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அதிமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளியின் குடும்ப உறுப்பினர் என்று கூறி தகுதியற்ற நபர்களுக்கு 807 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.குடும்ப உறுப்பினரை மாற்றி தகுதியற்ற நபர்களுக்கு 807 வீடுகள் வழங்கியதால் அரசுக்கு ரூ.14,11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.தகுதியற்ற குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் பிரதமர் வீடு கட்டும் திட்ட தவணைத் தொகை செலுத்தியும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் தகுதியற்ற குடும்பங்களின் வங்கிக் கணக்கில் ரூ.11.34 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் 3014 தகுதியற்ற குடும்பங்களுக்கு வீடுகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2016-21 காலகட்டத்தில் ஒப்புதல் தந்ததை விட குறைவாக கட்டப்பட்டுள்ளன. 5.09 லட்சம் வீடுகல்கட்ட ஒப்புதல் தரப்பட்டநிலையில் 2.80 லட்சம் வீடுகளே கட்டப்பட்டுள்ளன,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அதிமுக ஆட்சியின் போது, பிரதமர் வீடு கட்டும் திட்ட செயலாக்கத்தில் ரூ.53 கோடி முறைகேடு : சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்!! appeared first on Dinakaran.