பள்ளிகளின் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: குடிநீர் தொட்டிகள், வகுப்பறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம். போதிய நிதி அரசால் ஒதுக்கப்படாததால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களே இதை செய்ய வேண்டியுள்ளது. சில நேரங்களில் மாணவர்கள் மீது இந்தப் பணி திணிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். எனவே பள்ளிகளின் பராமரிப்புக்கு அரசு கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

The post பள்ளிகளின் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: