பணம் வசூலித்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, டிச. 3:  ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுலைமான், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நகர் செயலாளராக உள்ளேன். ராமநாத புரத்தைச் சேர்ந்த சிலர் எங்கள் கட்சியின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்தி மோசடி வேலைகளில் ஈடுபட்டனர். கட்சி பெயரில் போலி ரசீது தயாரித்து பணம் வசூலித்துள்ளனர். புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமநாதபுரம் டவுன் போலீசார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. எனவே, குற்றப்பத்திரிக்கையை விரைந்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, சம்பந்தப்பட்ட வழக்கின் குற்றப் பத்திரிகையை ராமநாதபுரம் டவுன் போலீசார் 4 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: