கோபி, டிச. 3: புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோபி பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டம், தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டம், மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோபி பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி கனகராஜ் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஷ்வரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.