மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கொரோனா

கோவை, டிச.2: கோவையில் கொரோனா காரணமாக நேற்று புதியதாக 141 பேர் பாதிக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில் கொரோனாவினால் தொடர்ந்து 150-க்கும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், பெரும்பாலானவர்கள் மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆவர். புறநகர் பகுதியில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று கோவை மாவட்டத்தில் புதியதாக 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 866-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 145 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 318ஆக உள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 935 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தவிர, நேற்று கொரோனா தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 613-ஆக உள்ளது.

Related Stories: