வேட்டவலம், டிச.2: வேட்டவலம்- விழுப்புரம் சாலையை சேர்ந்தவர் வேங்கையம்மாள்(70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பின்னால் வந்த மினி லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல், வேட்டவலம் அடுத்த காட்டுநல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி(30), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 29ம் தேதி காலை பைக்கில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். இலுப்பந்தாங்கல் அருகே வந்தபோது எதிரே வந்த கார், மோதியதில் படுகாயம் அடைந்த அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.