புதுச்சேரி, டிச. 2: புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடு இடங்கள் இடைத்தரகரால் சீரழிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் மொத்தம் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. அதில் மத்திய அரசின் ஜிப்மர், மாநில அரசின் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி தவிர்த்து மீதமுள்ள 7ம் தனியார் மருத்துவ கல்லூரிகள். இதில் 3 தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளும், 4 நிகர்நிலை மருத்துவக்கல்லூரிகளும் அடங்கும். முக்கியமாக தனியார் நிகர் நிலை மருத்துவக்கல்லூரிகள் ஒரு இடம்கூட புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்வதில்லை. இதற்கிடையே மத்திய அரசின் 2019 மருத்துவ ஆணையம் சட்ட மசோதாவை அமல்
படுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் 50 சதவீத இடங்களை பெறுவதற்கான சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.