ஊட்டி, நவ. 30: ஊட்டிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நகரில் முக்கிய சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள், சுற்றுலாதலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் சேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் ஊட்டி - கூடலூர் சாைல, கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஆகிய சாலைகளில் அதிநவீன தானியங்கி வாகன பதிவெண்களை பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நாளை (1ம் தேதி) முதல் ெசயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மாவட்ட எஸ்பி. தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்பி. சசிமோகன் கூறுகையில், ‘‘ஊட்டியில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்கள் சேரிங்கிராஸ் சந்திப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. 5 வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்களும், 4 கண்காணிப்பு கேமராக்களும் என மொத்தம் 9 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் மட்டுமின்றி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.