காவேரிப்பாக்கம், நவ.30: காவேரிப்பாக்கம் ஏரிக்கு நிவர் புயலால் ெபய்த தொடர் மழை காரணமாக 2,000 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 3வது பெரிய ஏரியாகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெரிய ஏரியாகவும் காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 3,968 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த ஏரி ஒரு முறை நிரம்பினால் மட்டும் விவசாயிகள் 3 போகம் அறுவடை செய்யலாம் என்பது இந்த ஏரியின் சிறப்பு தன்மை. இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு, பள்ளமதகு, உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக, கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகின்றன. தற்போது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாகவும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.