போளூர், நவ.30: வேலூர் அடுத்த அமிர்தி நாகநதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பைக்குடன் அடித்துச் செல்லப்பட்ட தபால் ஊழியர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை தாலுகா, கானமலை ஊராட்சி கீழ்கணவாயூர் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி மகன் மாதவன்(22). இவரது உறவினர் சரவணன்(33). அமிர்தி கிராம அஞ்சலகத்தில் தற்காலிக ஊழியர்கள். கடந்த 27ம் தேதி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு, அன்று மாலை பைக்கில் வீடு திரும்பினர். அமிர்தி நாகநதி ஆற்றில் பைக்குடன் இறங்கி கரையேற முயன்றனர். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் 2 பேரும் பைக்குடன் அடித்துச் செல்லப்பட்டனர்.