கீழ்பென்னாத்தூர், நவ.25: கீழ்பென்னாத்தூரில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவின் சடலத்தை கழிவுநீர் கால்வாயில் வீசிச்சென்றுள்ளனர். இதுகுறித்து ஏஎஸ்பி கிரண்ஸ்ருதி விசாரணை நடத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் உழவர் சந்தை எதிரே நேற்று, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவின் சடலம் கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த நாய்கள் சடலத்தை இழுத்து தரதரவென சென்றன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, சடலத்தை மீட்டனர். உடனடியாக கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.