செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் (பொறுப்பு) க.பிரியா தலைமையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுக்கான அவசர அலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட இயக்குநர் செல்வக்குமார் உட்பட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிவர் புயல் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் - கல்பாக்கம் இடையே கரையை கடக்கும் என்பதால், மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்படும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக மீட்பது, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் செயல்படும் விதம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், கலெக்டர் பிரியா (பொறுப்பு), செய்தியாளர்களிடம் கூறியதாவது, நிவர் புயல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.