ஈரோடு, நவ.23: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஈரோடு எஸ்பி.க்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, எஸ்பி. தங்கதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.