திருவண்ணாமலை, நவ.21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முதல் நடந்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நடைமுறையை பின்பற்றி, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அரவிந்த் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்களுக்கு முறையாக உடல் வெப்ப பரிேசாதனை செய்ய வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.மேலும், வெப்ப அளவீடு கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும், முதியவர்கள், சிறுவர்களை அனுமதிக்க கூடாது. அதேபோல், வரிசையில் செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி செல்வதை கண்காணிக்க வேண்டும் என்றார்.