நாகர்கோவில், நவ. 12: ஆஸ்டின் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுப்பணி மற்றும் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க குமரி மாவட்டம் வருகை தந்தார். அவர் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார், புதிய அறிவிப்புகளை வழங்குவார், பல திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பார் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் முதல்வர் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்கவோ, தொடங்கி வைக்கவோ இல்லை. முதல்வர் முதல்முறை (22.9.2020) குமரி மாவட்டம் வருகை தருவதாக அறிவித்தபோதே, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், நிலுவையில் உள்ள பணிகள், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க வேண்டியவை உட்பட 95 திட்ட பணிகளை செப்டம்பர் 16ம் தேதி, முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவாக அளித்திருந்தேன். ஆனால் அது தொடர்பாக எந்த பயனும் இல்லை.