வால்பாறை,நவ.12: வால்பாறை பகுதியில் தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைக்கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அடர் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி எஸ்டேட் பகுதிகளில் உள்ள சிறு வனப்பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் 11 கூட்டத்தை சேர்ந்த சுமார் 100 யானைகள் வனத்தை விட்டு வெளியேறி உள்ளது. முடீஸ் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 70 காட்டு யானைகள் பல்வேறு கூட்டங்களாக முகாமிட்டுள்ளது. இந்நிலையில் இரசு வலசப்பாதையில் வந்த 8 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று விடியத் துவங்கியதும், முடீஸ் எஸ்டேட் தேயிலைத்தோட்ட பகுதியில் உள்ள நீர் நிலை பகுதியில் முகாமிட்டது.