தனியார் பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 8 மாதங்களுக்கு பிறகு திருச்சியில் 4 சினிமா தியேட்டர்கள் திறப்பு

திருச்சி, நவ.11: கொரோனா ஊரடங்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது. தற்போது சகஜ நிலை திரும்பிய நிலையில் திரையரங்கை 10ம் தேதி திறக்க அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து நேற்று திரையரங்குகள் திறக்கப்பட்டது. ஆனாலும், தற்போது தீபாவளி என்பதால் புதுப்படங்கள் வெளியாகாத நிலையில் பழைய படங்களே திரையிடப்பட்டது. இதில் மரக்கடை பகுதியில் உள்ள திரையரங்களில் எம்ஜிஆர் நடித்த படம் திரையிடப்பட்டது. குறைந்த அளவில் ரசிகர்கள் வந்திருந்து படம் பார்த்தனர். முன்னதாக டிக்கெட் கவுண்டரில் சானிடைசர் வழங்கப்பட்டது. முக கசவம் உள்ளவர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்கப்பட்டது. மேலும் திரையரங்கில் இடைவெளி விட்டு இருக்கைகள் தயார் செய்யப்பட்டிருந்தது. திருச்சி மாநகரில் 4 திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டது.

Related Stories: