புவனகிரி, நவ. 10: பரங்கிப்பேட்டை அண்ணங்கோவில் கடற்கரை பகுதியில் நேற்று மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அண்ணங்கோவில் கடலோர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது மஞ்சள் நிறத்தில் கோபுர கலச வடிவில் கிடந்த பொருளை மீட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் அந்த பொருள் பரங்கிப்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், அந்த பொருள் கடற்கரை பகுதியான புதுக்குப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் அனல் மின் நிலையத்திற்கு சொந்தமானது என்றும், அனல் மின் நிலையத்தின் பைப் லைன்கள் கடலுக்கு அடியில் செல்வதால் பைப் லைன்கள் இருக்கும் இடம் குறித்து மீனவர்களுக்கு தெரிவிக்கும் போயா என்ற மிதவை கருவி எனவும் தெரிய வந்தது.