தூத்துக்குடி, நவ. 9: சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தூத்துக்குடி தேவர்காலனி பொதுமக்கள் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வார்டு தேவர் காலனி 3வது தெரு கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்த நிலையிலேயே இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை.