செய்யாறு, நவ.6: செய்யாறில் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள், மக்கள் திரண்டதால் ஓட்டம் பிடித்தனர்.
செய்யாறு சின்னத்தெருவில் வினை தீர்க்கும் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் அர்ச்சகர் பாபு, நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பூஜைகள் முடித்துவிட்டு, கோயிலை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் கோயில் பகுதியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வெளியே வந்துபார்த்தனர். அப்போது, கோயில் வாசலில் தரையில் புதைக்கப்பட்ட இரும்பு உண்டியலில் 4 பூட்டுக்களை, 2 மர்ம நபர்கள் இரும்பு ராடால் உடைத்துக் கொண்டிருந்தனர்.