கோவை, நவ. 5: கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் இருந்து இதுவரை ரூ.34 லட்சத்து 9 ஆயிரத்து 252 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் கோவை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் என கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து மாநகராட்சி சார்பாக அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி முக கவசம் அணிய வில்லை என்றால் ரூ.200, சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது.