திருவண்ணாமலை, நவ.4: திருவண்ணாமலை அருகே வறுமையில் தவித்த கல்லூரி மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க ஸ்மார்ட் செல்போனை கலெக்டர் வழங்கினார். திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சவுந்தர்யா(18). இவர், திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தையை இழந்த அவர், தாயின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். சொந்த வீடு, நிலம் இல்லாமல் வறுமையில் தவிக்கும் மாணவி சவுந்தர்யா, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஸ்மார்ட்போன் இல்லாமல் தவித்து வந்தார்.
இதுதொடர்பாக, நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், மாணவி சவுந்தர்யா தன்னுடைய கல்விக்கு உதவுமாறு மனு அளித்தார். இது தொடர்பாக, அதிகாரிகள் மூலம் விசாரித்த கலெக்டர், மாணவியின் வறுமை நிலையை உறுதி செய்தார்.