உத்தமபாளையம், நவ.3: உத்தமபாளையத்தில் இயங்கி வந்த தனியார் சிட்பண்ட் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதில் டெபாஸிட், மாதச்சீட்டு, ஏலச்சீட்டு உள்ளிட்டவை போடப்பட்டு மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதன் பங்குதாரராக இருந்த அஜீஸ்கான் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். மற்றொரு பங்குதாரான ஜமாலுதீன் பணத்தை திரும்ப தர கைவிரித்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களை நடத்தினர்.இதனை அடுத்து திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி நேற்று கம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.