மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ.3: ஆதிதமிழர் பேரவையினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரவையின் மாவட்ட செயலாளர் ஆதவன் தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் பாரதிதாசன், கௌரியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவருக்கு சமூக நீதியை வழங்க மறுக்கும் மத்திய அரசையும், அதற்கு துணையாக இருக்கும் தமிழக அரசையும் கண்டிக்கிறோம். தமிழகத்தில் பாஜ.வினர் நடத்தும் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்பு கோரிக்கை மனுவை கலெக்டர் அன்பழகனிடம் வழங்கினர்.

Related Stories: