பொன்னமராவதி அருகே காரையூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலவாழ்வு குழுக் கூட்டம்

பொன்னமராவதி, நவ.3: பொன்னமராவதி அருகே உள்ளன காரையூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் நடைபெற்ற கிராம சுகாதார நலவாழ்வுக்குழுக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி அருகே உள்ளன காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார நலவாழ்வுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தார். கிராம சுகாதார நலக்குழு அமைப்பது பற்றியும், செயல்முறை பற்றியும் விளக்கப்பட்டது. டெங்கு, கொரோனோ தொற்றுநோய் மற்றும் அரசு நலத்திட்டங்கள் பற்றியும் விளக்கி பேசினர். மருத்துவ அலுவலர் வெங்கட்ராமன், சமுதாய சுகாதார செவிலியர் சுமிதாஜான்சி, ஊராட்சித் தலைவர்கள் முருகேசன், குமார், மாரிக்கண்ணு, ராமையா, செல்வராஜ், சூர்யா, சந்திரா, ராமன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: