ஏரல், நவ. 1: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஏரலில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனையின் படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முறைப்படி விண்ணப்பித்தும் கொரோனா ஊரடங்கால் போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர். இருப்பினும் ஏரலில் தடையை மீறி நடத்தப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தெற்கு மாவட்டத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். ஓபிசி மாநில துணைத்தலைவர் காமராஜ், மாவட்ட தலைவர் தாசன் முன்னிலை வகித்தனர்.