ஊட்டி,நவ.1:வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கட்டுமான பொருட்கள் மற்றும் தார் கலவைகளை ஏற்றி வரும் லாரிகள் வேகமாக இயக்கப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்காக நாள் தோறும் ஏராளமான டிப்பர் லாரிகள் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து மணல், ஜல்லி கற்கள், செங்கல், கம்பிகள் மற்றும் இதர ெபாருட்களை ஏற்றி வருகின்றன. குறிப்பாக, சமவெளிப் பகுதிகளில் இருந்தே தார் கலவைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. மாவட்டத்தில் எங்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்தாலும், நாள் ஒன்றுக்கு 50 லாரிகள் வரை வந்துச் செல்கின்றன. இந்த லாரிகள் குறித்த ேநரத்திற்குள் தார் கலவையை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக இயக்குகின்றனர்.