திருப்பூர், அக். 30: திருப்பூரில் பனியன் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் தென்னம்பாளையம் நாவிதன் தோட்டத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (47). இவர் தமிழ்நாடு தியேட்டர் அருகே உள்ள ஒரு பனியன் நிட்டிங் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 25ம் தேதி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு சென்றார்.