காங்கயம், அக். 30:கோவை மாவட்டம் இருகூரிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலம் தேவனகந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் குழாய் அமைத்து பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் (ஐ.டி.பி.எல்) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து ஆட்சேபனை இருந்தால், காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் நவம்பர் மாதம் 3,4,6ம் தேதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கான விசாரணை (பேச்சுவார்த்தை) அழைப்பாணை படியூர், சிவன்மலை, மரவபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.