திருவண்ணாமலை, அக்.30: திருவண்ணாமலை பண்ணை பசுமை அங்காடிகளில் மலிவு விலை வெங்காயம் விற்பனை நேற்று தொடங்கியது.கடந்த சில வாரங்களாக வெங்காயம் விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ வெங்காயம் ₹100 முதல் 120 வரை விற்கப்படுகிறது. அதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, பண்ணை பசுமை அங்காடிகளில் ஒரு கிலோ வெங்காயம் ₹45 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் விற்பனை நடந்தது. ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் விற்பனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.இதுகுறித்து, தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, பண்ணை பசுமை அங்காடிகளில் வெங்காயம் விற்பனை நேற்று முதல் ெதாடங்கியது. அதன்படி, திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள பண்ணை பசுமை அங்காடியில், வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயம் வாங்கிச் சென்றனர். ஒரு நபருக்கு ஒரு கிேலா வெங்காயம் மட்டுமே வழங்கப்பட்டது.