கூடலூர்,அக்.23:கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதி மேபீல்டு. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனை ஒட்டி தனியார் தேயிலை தோட்ட குடியிருப்புகளும் உள்ளன.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மேபீல்டு பஜார் பகுதியில் உள்ள கடைகளில் வாங்குவது வாடிக்கை. இந்நிலையில் இங்குள்உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 8 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மேபீல்டு பஜார் பகுதி ஆகியவற்றில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்து துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.