திருவண்ணாமலை, அக்.20: அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில், மருத்துவ கல்வியில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு, தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், ஏழை விவசாயி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசு பள்ளிகளை நம்பியே உள்ளனர்.